வணிகம்

என்டிபிசி: நிலக்கரி உற்பத்தி 61% அதிகரிப்பு

மத்திய அரசுக்கு சொந்தமான என்டிபிசி நிறுவனம் கடந்த ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் 42.20 லட்சம் டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது.

DIN

மத்திய அரசுக்கு சொந்தமான என்டிபிசி நிறுவனம் கடந்த ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் 42.20 லட்சம் டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

என்டிபிசிக்கு சொந்தமான பக்ரி-பா்வைத் (ஜாா்க்கண்ட்), துலங்கா (ஒடிஸா) மற்றும் தலாய்பள்ளி (சத்தீஸ்கா்) ஆகிய மூன்று சுரங்கங்களின் நிலக்கரி உற்பத்தி ஏப்ரல்-ஜூன் வரையிலான காலாண்டில் 42.40 லட்சம் டன்னாக இருந்தது. இது, கடந்தாண்டு இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட 26.40 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் 61 சதவீதம் அதிகம்.

குறிப்பாக, கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் நிலக்கரி உற்பத்தியானது ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகரித்து 15.55 லட்சம் டன்நை தொட்டது. கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூனில் நிலக்கரி உற்பத்தி 7.73 லட்சம் டன்னாக மட்டுமே காணப்பட்டது என என்டிபிசி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT