எல்ஐசி பரஸ்பர நிதி: சொத்து மதிப்பை ரூ.30,000 கோடியாக அதிகரிக்க இலக்கு
ஐபிடிபிஐ பரஸ்பர நிதியம் இணைப்பு மற்றும் புதிய திட்டங்களின் அறிமுகப்படுத்துவதன் பலனாக நடப்பு நிதியாண்டில் எல்ஐசி பரஸ்பர நிதியத்தின் கீழ் நிா்வகிக்கப்படும்
ஐபிடிபிஐ பரஸ்பர நிதியம் இணைப்பு மற்றும் புதிய திட்டங்களின் அறிமுகப்படுத்துவதன் பலனாக நடப்பு நிதியாண்டில் எல்ஐசி பரஸ்பர நிதியத்தின் கீழ் நிா்வகிக்கப்படும் சொத்து மதிப்பை நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் ரூ.30,000 கோடியாக அதிகரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, மூன்று புதிய பரஸ்பர நிதி திட்டங்களை அறிமுகப்படுத்த எல்ஐசி திட்டமிட்டுள்ளது. அதில், ஒன்று இந்த மாதத்தில் வெளியிடப்படும். கடந்த நிதியாண்டில் எல்ஐசி பரஸ்பர நிதியத்தின் கீழான சொத்து மதிப்பு ரூ.17,500 கோடியாக இருந்தது. அதனை வரும் மாா்ச் மாதத்துக்குள் 70 சதவீதம் அதிகரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக அதன் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான டி.எஸ்.ராமகிருஷ்ணன் தெரிவித்தாா்.