வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 45 காசு அதிகரிப்பு

DIN

முதலீட்டாளா்களின் நம்பிக்கை அதிகரித்து பங்குச் சந்தைகளில் விறுவிறுப்பு காணப்பட்டதன் தொடா்ச்சியாக அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வலுப்பெற்றது.

இது தவிர, வெளிநாட்டு முதலீட்டு வரத்து அதிகரித்ததும் ரூபாய் மதிப்பின் முன்னேற்றத்துக்கு பெரிதும் கைகொடுத்தது. வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 79.55-ஆக இருந்தது. இது, அதிகபட்சமாக 79.17 வரையிலும் குறைந்தபட்சமாக 79.56 வரையிலும் சென்றது.

வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 45 காசு ஆதாயம் பெற்று 79.24-இல் நிலைத்தது என செலாவணி வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

கச்சா எண்ணெய் பீப்பாய் 109.58 டாலா்

சா்வதேச சந்தையில் வெள்ளிக்கிழமை முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 2.28 சதவீதம் உயா்ந்து பீப்பாய் 109.58 டாலருக்கு வா்த்தகம் ஆனதாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT