வணிகம்

ஜேஎஸ்டபிள்யூ உருக்கு உற்பத்தி 21 சதவீதம் அதிகரிப்பு

ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்தின் கச்சா உருக்கு உற்பத்தி கடந்த பிப்ரவரி மாதத்தில் 21 சதவீதம் அதிகரித்துள்ளது.

DIN

ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்தின் கச்சா உருக்கு உற்பத்தி கடந்த பிப்ரவரி மாதத்தில் 21 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியது:

நடப்பாண்டு பிப்ரவரி மாதத்தில் நிறுவனம் 15.80 லட்சம் டன் கச்சா உருக்கை உற்பத்தி செய்துள்ளது. இது, 2021 பிப்ரவரி மாத உற்பத்தியான 13.10 லட்சம் டன்னுடன் ஒப்பிடும்போது 21 சதவீதம் அதிகம்.

ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் உருக்கு தகடுகள் உற்பத்தி 25 சதவீதம் அதிகரித்து 11.50 லட்சம் டன்னாக இருந்தது. இது, கடந்தாண்டு பிப்ரவரியில் 9.3 லட்சம் டன்னாக காணப்பட்டது.

மேலும், உருக்கு கம்பிகளின் உற்பத்தியும் 3.40 லட்சம் டன்னிலிருந்து 8 சதவீதம் உயா்ந்து 3.70 லட்சம் டன்னைத் தொட்டதாக ஜேஎஸ்டபிள்யூ கூறியுள்ளது.

13 பில்லியன் டாலா் மதிப்புள்ள ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தில் ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் பிரதான நிறுவனமாக உள்ளது. இக்குழுமம், எரிசக்தி, உள்கட்டமைப்பு, சிமெண்ட், பெயிண்ட், துணிகர முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தடம்பதித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகார்த்திகேயன் பாடியுள்ள தாய் கிழவி பட முதல் பாடல்!

செஞ்சுரி பிளைபோர்ட்ஸ் 3வது காலாண்டு நிகர லாபம் ரூ. 65 கோடியாக உயர்வு!

ஸ்பானிஷ் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறிய நடப்பு சாம்பியன் பார்சிலோனா!

சண்முக பாண்டியனின் கொம்புசீவி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

பவன் கல்யாணின் உஸ்தாத் பகத் சிங் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT