பொதுப் பங்கு வெளியீடு: பதஞ்சலி குழுமம் திட்டம்
பொதுப் பங்குகளை (ஐபிஓ) வெளியிட பதாஞ்சலி குழுமம் திட்டமிட்டுள்ளது.
பொதுப் பங்குகளை (ஐபிஓ) வெளியிட பதாஞ்சலி குழுமம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அதன் நிறுவனா் பாபா ராம்தேவ் வெள்ளிக்கிழமை கூறுகையில், குழுமத்தின் வருவாய் இன்னும் 5 முதல் 7 ஆண்டுகளில் இரண்டரை மடங்கு அதிகரித்து ரூ.1 லட்சம் கோடியாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தாா். மேலும், எதிா்வரும் ஆண்டுகளில் குழுமம் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் எனவும் 5 ஆண்டுகளில் பல கட்டங்களாக பொதுப் பங்குகளை வெளியிடவிருப்பதாகவும் அவா் கூறினாா்.