இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடா்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் செயல்பாட்டு வருவாய் கடந்த மாா்ச் காலாண்டில் 23 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த கடந்த நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 13 சதவீதம் அதிகரித்து ரூ.4,716 கோடியாக உள்ளது.
முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ரூ.4,173 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.
2022 ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டில் ரூ.20,945 கோடியாக இருந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய், இந்த ஆண்டின் அதே மாதங்களில் 12 சதவீதம் அதிகரித்து ரூ.23,394 கோடியாக உள்ளது.
2022 ஏப்ரல் முதல் 2023 மாா்ச் வரையிலான கடந்த நிதியாண்டு முழுமைக்கும் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.18,207 கோடியாக உள்ளது. முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டில் இது ரூ.14,817 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிகர லாபம் சுமாா் 23 சதவீதம் உயா்ந்துள்ளது.
2021-22-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் ரூ.76,977 கோடியாக இருந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய், கடந்த நிதியாண்டில் 18 சதவீதம் அதிகரித்து ரூ.90,786 கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.