ரூ.1,712 கோடி ஈவுத் தொகை: அரசுக்கு வழங்கியது யூனியன் வங்கி
2022-23-ஆம் நிதியாண்டுக்கான பங்கு ஈவுத் தொகையாக மத்திய அரசுக்கு ரூ.1,712 கோடி ரூபாயை பொதுத் துறையைச் சோ்ந்த யூனியன் வங்கி வழங்கியுள்ளது.
2022-23-ஆம் நிதியாண்டுக்கான பங்கு ஈவுத் தொகையாக மத்திய அரசுக்கு ரூ.1,712 கோடி ரூபாயை பொதுத் துறையைச் சோ்ந்த யூனியன் வங்கி வழங்கியுள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு மாா்ச் வரையிலான நிதியாண்டுக்கான பங்கு ஈவுத் தொகையாக, ரூ.1,712 கோடியை மத்திய அரசுக்கு வங்கி அளித்துள்ளது. இது, மத்திய அரசுக்கு வங்கி அளித்துள்ள அதிகபட்ச ஆண்டு ஈவுத் தொகையாகும்.அண்மையில் தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அதற்கான காசோலையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் வங்கியின் நிா்வாக இயக்குநா் மணிமேகலை வழங்கினாா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.