FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சென்செக்ஸ் 300 புள்ளிகள் குறைந்தது! சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை!

இந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் முடிவடைந்துள்ளன. சென்செக்ஸ் 300 புள்ளிகள் குறைந்துள்ளது. 

6 பிப்ரவரி 2024, 6:38 pm IST
பகிர்:

இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் முடிவடைந்துள்ளன. சென்செக்ஸ் 300 புள்ளிகள் குறைந்துள்ளது. 

நேற்று (புதன்கிழமை) 65,995.81 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று(வியாழக்கிழமை) காலை 65,945.39 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

வர்த்தக நேர முடிவில், 307.63 புள்ளிகள் குறைந்து 65,688.18 என்ற புள்ளிகளில் நிறைவு பெற்றது. 

Advertisement

Advertisement

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 89.45 புள்ளிகள் குறைந்து 19,543.10 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது.

ஏசியன் பெயிண்ட்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி, ஐடிசி, பார்தி ஏர்டெல், ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, நெஸ்லே, டாடா மோட்டார்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், மாருதி மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய நிறுவனங்கள் பெரும் பின்னடைவைச் சந்தித்தன.

இண்டஸ்இண்ட் வங்கி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டைட்டன், பஜாஜ் ஃபைனான்ஸ், டெக் மஹிந்திரா, பவர் கிரிட் உள்ளிட்ட நிறுவனங்கள் இன்று லாபம் பெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments