முகப்பு
வணிகம்

பங்குச்சந்தைகள் சரிவு: சென்செக்ஸ் 200 புள்ளிகள் குறைந்தது!

கடந்த ஒரு சில நாள்களாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்து வருகின்றன. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:51 AM
கோப்புப்படம்
பகிர்:

கடந்த ஒரு சில நாள்களாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்து வருகின்றன. 

நேற்று (வியாழக்கிழமை) 65,151.02 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 65,025.71 என்ற புள்ளிகளில் தொடங்கியது. 

வர்த்தக நேர முடிவில், 202.36 புள்ளிகள் குறைந்து 64,948.66 என்ற புள்ளிகளில் நிறைவு பெற்றது. 

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 55.10 புள்ளிகள் குறைந்து 19,310.15 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. 

அதானி எண்டர்பிரைசஸ், அதானி துறைமுகங்கள், ஈச்சர் மோட்டார்ஸ், நெஸ்லே இந்தியா, ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன. 

டிசிஎஸ், ஹீரோ மோட்டோகார்ப், ஹிண்டால்கோ, இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் பின்னடைவைச் சந்தித்தன.

முழு கட்டுரையைப் படிக்க →