டிஎன்எஸ்டிசி 552 பேருந்துகள்: அசோக் லேலண்ட் ஒப்பந்தம்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு (டிஎன்எஸ்டிசி) 552 பேருந்துகளை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தை, ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் பெற்றுள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு (டிஎன்எஸ்டிசி) 552 பேருந்துகளை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தை, ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் பெற்றுள்ளது.
இது குறித்து, சென்னையில் தலைமையகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 552 புதிய பேருந்துகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
மிகவும் தாழ்வான தளங்களைக் கொண்ட அந்தப் பேருந்துகள் பொதுப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும்.
தமிழ்நாடு அரசுக் போக்குவரத்துக் கழகம் அசோக் லேலண்ட் நிறுவன பேருந்துகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. அந்த அமைப்பில் 18,447 அசோக் லேலண்ட் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.