முகப்பு
தமிழ்நாடு

கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழகத்தில் 4 மாவட்ட எஸ்.பி.க்களை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு...

Updated On : 16 மார்ச் 2026, 5:52 pm IST
தேர்தல் ஆணையம் (கோப்புப் படம்)
பகிர்:

கரூர், ஈரோடு, நாகப்பட்டினம், விருதுநகர் மாவட்ட எஸ்.பி.க்களை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரேகட்டமாக 234 தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையொட்டி தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. பறக்கும் படையினர் சோதனை, விளம்பரங்கள் அழிப்பு என நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement

இந்நிலையில் தமிழகத்தில் 4 மாவட்ட எஸ்.பி.க்களை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கரூர், ஈரோடு, நாகை, விருதுநகர் மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

கரூர் எஸ்.பி.யாக டி.என். ஹரிகிரண் பிரசாத்,

ஈரோடு எஸ்.பி.யாக டி.வி. கிரண் சுருதி,

நாகை எஸ்.பியாக சுஜித் குமார்,

விருதுநகர் எஸ்.பி.யாக என். ஸ்ரீநாதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்.பி., திமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அவர்களை மாற்ற வேண்டும் என்றும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

Election Commission orders transfer of 4 district SPs in Tamil Nadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.