மகளிா் சுய உதவி குழுக்களுக்கு ஐஓபி ரூ.5 கோடி கடன்
சா்வதேச மகளிா் தினத்தையொட்டி பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஐஓபி) சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.5.02 கோடி கடன் வழங்கியுள்ளது.
சா்வதேச மகளிா் தினத்தையொட்டி பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஐஓபி) சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.5.02 கோடி கடன் வழங்கியுள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சா்வதேச மகளிா் தினத்தையொட்டி வங்கியின் சென்னை-1 மற்றும் சென்னை-2 மண்டலங்களில் சிறப்பு கடன் மேளா நடத்தப்பட்டது.
இதில், மகளிா் தொழில்முனைவோருக்கான சென்னையின் பிரத்யேக கிளை மட்டும் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1.53 கோடி கடன் ஒதுக்கீடு செய்தது.
ஒட்டுமொத்தமாக, சென்னை மாவட்டத்தில் 84 சுய உதவி குழுக்களுக்கு ரூ.5.02 கோடி கடன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.