கோப்புப் படம் 
வணிகம்

பங்குச்சந்தை வணிகம் 2வது நாளாக சற்று உயர்வு!

பங்குச்சந்தை வணிகம் 2வது நாளாக உயர்வுடன் காணப்பட்டது. சென்செக்ஸ், நிஃப்டி சற்று ஏற்றத்துடன் முடிந்தன.

DIN

பங்குச்சந்தை வணிகம் 2வது நாளாக உயர்வுடன் காணப்பட்டது. சென்செக்ஸ், நிஃப்டி ஆகியவை சற்று ஏற்றத்துடன் முடிந்தன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் 13.65 புள்ளிகள் உயர்ந்து 81,711.76 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.017சதவீதம் உயர்வாகும்.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 7.15 புள்ளிகள் சரிந்து 25,017.75 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.029 சதவீதம் உயர்வாகும்.

பங்குச்சந்தை சென்செக்ஸ் 81,815.23 என்ற புள்ளிகளுடன் தொடங்கி பின்னர் 81,600.51 என்ற அளவுக்கு சரிந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து 81,919.11 என்ற அதிகபட்சத்தை எட்டியது.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில் 1 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் காணப்பட்டன.

அதிகபட்சமாக மாருதி சுசூகி நிறுவனத்தின் பங்குகள் 2.07% ஏற்றத்துடன் நிலைப்பெற்றன. அதற்கு அடுத்தபடியாக பஜாஜ் ஃபின்சர்வ் 1.95%, எல்&டி 1.67%, இன்ஃபோசிஸ் 1.28%, பஜான் ஃபைனானஸ் 1.26%, ஐசிஐசிஐ வங்கி 1.08% பங்குகள் உயர்திருந்தன.

இதேபோன்று டைட்டன் கம்பெனி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ஹிந்துஸ்தான் யூனிலிவர், டாடா மோட்டார்ஸ், என்டிபிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.

மேலும் நிஃப்டி பட்டியலிலுள்ள 50 தரப் பங்குகளில் எஸ்பிஐ லைஃப், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், மாருதி சுசூகி, பஜாஜ் ஃபின்சர்வ், எச்டிஎஃப்சி லைஃப், எல்&டி, இன்ஃபோசிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி சன் பார்மா, ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்றத்துடன் இருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு: நஸீா் பிலாலை மேலும் 7 நாள்கள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி

தில்லியில் முதல் கட்டமாக 10,000 வகுப்பறைகளில் காற்று சுத்திகரிப்பான்கள் நிறுவப்படும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் அறிவிப்பு

தில்லியில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத சுமாா் 2800 வாகனங்களுக்கு எரிபொருள் மறுப்பு

புத்தொழில் திட்டத்தில் மாவட்டத்தின் முதல் கிராமமாக ‘ஆசனூா்’ தோ்வு

காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் கசிந்த அடா் புகை

SCROLL FOR NEXT