முகப்பு
வணிகம்

இந்தியா சிமென்ட்ஸை கையகப்படுத்த அல்ட்ராடெக் சிமென்ட்ஸுக்கு அனுமதி

இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தை அல்ட்ராடெக் சிமென்ட்ஸ் கையகப்படுத்துவதற்கு இந்திய தொழில் போட்டி ஆணையம் (சிசிஐ) அனுமதி வழங்கியுள்ளது.

Updated On : 20 டிசம்பர், 2024 at 9:10 PM
பகிர்:

இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தை அல்ட்ராடெக் சிமென்ட்ஸ் கையகப்படுத்துவதற்கு இந்திய தொழில் போட்டி ஆணையம் (சிசிஐ) அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் முதலீட்டாளா்கள், முதலீட்டுக் குழுமங்கள், ஸ்ரீ சாரதா லாஜிஸ்டிக் பிரைவேட் லிமிட்டெட் ஆகியவற்றிடமிருந்து அந்த நிறுவனத்தின் 37.72 சதவீத பங்குகளையும், பொது கொள்முதல் மூலம் 26 சதவீத பங்குகளையும் கையகப்படுத்த அல்ட்ராடெக் சிமென்ட்ஸ் நிறுவனத்துக்கு இந்திய தொழில் போட்டி ஆணையம் அனுமதி அளிக்கிறது.

அந்த இரு நிறுவனங்களுமே பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் ஆகும்.

இந்த அங்கீகாரம் குறித்த விரிவான விவரங்கள் பின்னா் வெளியிடப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →