கோப்புப் படம் 
வணிகம்

வரலாற்று சிறப்புமிக்க 80,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்த சென்செக்ஸ்!

உறுதியான போக்கும், எஃப்ஐஐகளின் வரவு ஆகியவற்றால் இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் அதன் வாழ்நாள் உச்சத்தை எட்டியது.

DIN

உறுதியான உலகளாவிய போக்கும், வலுவான எஃப்ஐஐகளின் வரவு ஆகியவற்றால் இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் அதன் வாழ்நாள் உச்சத்தை எட்டியது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 62.87 புள்ளிகள் உயர்ந்து 80,049.67 புள்ளிகளை எட்டியது. நிஃப்டி 15.65 புள்ளிகள் உயர்ந்து 24,302.15 புள்ளிகளைத் தொட்டது.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா, இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. அதே வேளையல் ஹெச்.டி.எஃப்.சி வங்கி, இண்டஸ் இண்ட் வங்கி, அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை சரிந்து முடிந்தது.

நேற்றைய வர்த்தகத்தில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் சுமார் ரூ.5,483.63 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கி உள்ளனர்.

ஆசிய சந்தைகளில் டோக்கியோ மற்றும் சியோல் இன்று ஏற்றத்திலும், ஷாங்காய் மற்றும் ஹாங்காங் சரிந்தும் வர்த்தகமாயின. அமெரிக்க சந்தைகள் நேற்று (புதன்கிழமை) வர்த்தகத்தில் உயர்வுடன் முடிவடைந்தன. சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.60 சதவிகிதம் குறைந்து 86.82 அமெரிக்க டாலராக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடர்ந்து 4-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!!

தங்கம் விலை அதிரடியாக உயர்வு! எவ்வளவு?

2,833 காவலர்கள் பணிக்கான தேர்வு தேதி அறிவிப்பு!

தவெக மாநாடு: பணியில் 200 செவிலியர்கள் உள்பட 600 மருத்துவக் குழுவினர்!

பக்தா்கள் பணத்தில் மட்டுமே கோயில் திருப்பணிகள் நடைபெறுகின்றன: இந்து முன்னணி

SCROLL FOR NEXT