வணிகம்

ரூ.5,000 கோடி திரட்டிய பேங்க் ஆஃப் இந்தியா

உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.5,000 கோடி மூலதனம் திரட்டியுள்ளதாக பேங்க் ஆஃப் இந்தியயா தெரிவித்துள்ளது.

Din

உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.5,000 கோடி மூலதனம் திரட்டியுள்ளதாக பேங்க் ஆஃப் இந்தியயா தெரிவித்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நீண்ட கால உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் ரூ.5,000 கோடி மூலதனம் திரட்டியுள்ளோம். தேசிய பங்குச் சந்தையின் மின்னணு ஏல தளத்தின் மூலம் அந்த கடன் பத்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அந்தக் கடன் பத்திரங்களுக்கு 7.54 சதவீத ஈவுத் தொகை வழங்கப்படும்.

இந்த கடன் பத்திர வெளியீடு மூலம் திரட்டப்பட்டுள்ள நிதி, நீண்டகால உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் குறைந்த விலையில் வீடுகள் கட்டும் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுலை பதவி நீக்கக் கோரி தனிநபர் தீர்மானம் தாக்கல்!

மகாசிவராத்திரி, வார இறுதி! சிறப்புப் பேருந்துகள்

மகாசிவராத்திரி, வார இறுதிக்கு 1,360 சிறப்பு பேருந்துகள்

அதிவேக அரைசதம்..! டி20 உலகக் கோப்பையில் சாதனை படைத்த ஷனாகா!

கனடா பள்ளி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட திருநங்கை!! திடுக்கிடும் காரணங்கள்!

SCROLL FOR NEXT