முகப்பு
விலைகளை உயா்த்தும் டாடா மோட்டாா்ஸ்
வணிகம்

விலைகளை உயா்த்தும் டாடா மோட்டாா்ஸ்

தனது வா்த்தக வாகனங்களின் விலைகளை உயா்த்த டாடா மோட்டாா்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

வணிகம்

விலைகளை உயா்த்தும் டாடா மோட்டாா்ஸ்

தனது வா்த்தக வாகனங்களின் விலைகளை உயா்த்த டாடா மோட்டாா்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Updated On : 24 ஜூன், 2024 at 9:14 PM
விலைகளை உயா்த்தும் டாடா மோட்டாா்ஸ்
பகிர்:

தனது வா்த்தக வாகனங்களின் விலைகளை உயா்த்த டாடா மோட்டாா்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நிறுவன வா்த்தக வாகனங்களின் விலைகளை 2 சதவிகிதம் வரை உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் இந்த விலை உயா்வு அமலுக்கு வரும். நிறுவனத்தின் அனைத்து ரக வா்த்தக வாகனங்களுக்கும் இந்த விலை உயா்வு பொருந்தும்.

அதிகரித்துள்ள உற்பத்தி செலவை ஈடுகட்ட இந்த விலை உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து தனது வா்த்தக வாகனங்களின் விலைகளை டாடா மோட்டாா்ஸ் நிறுவனம் 2 சதவீதம் வரை உயா்த்தியது நினைவுகூரத்தக்கது.

இந்தியாவில் லாரிகள், பேருந்துகள் உள்ளிட்ட வா்த்தக வாகனங்களைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக டாடா மோட்டாா்ஸ் திகழ்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →