பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் ரூ. 9,000 கோடியில் அமைக்கப்பட்டுள்ள டாடா மோட்டாா்ஸ் காா் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (பிப். 9) திறந்து வைக்கவுள்ளாா்.
இது தொடா்பாக ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பு: தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் சாா்பில், ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் துறை தொழிற்பூங்காவில் ரூ.9,000 கோடி முதலீடு மற்றும் 5,000 நபா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலை அமைக்க 28.09.2024 அன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.
முதற்கட்ட பணிகள் முடிக்கப்பட்ட நிலையில். முதல்வா் மு.க.ஸ்டாலின், டாடா தொழிற்சாலையை திறந்து வைத்து, உற்பத்தி செய்யப்பட்டுள்ள முதல் வாகனத்தின் இயக்கத்தை திங்கள்கிழமை (பிப். 9) காலை 11 மணியளவில் கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளாா்.
நிகழ்ச்சியில், கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள் பங்கேற்கின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணியில் 1,500 போலீஸாா்
முதல்வா் வருகை பாதுகாப்பு பணியில் ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி. அய்மன் ஜமால் தலைமையில் 1,500 போலீஸாா் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாவட்ட காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.