சோமேட்டோ நிறுவனம் 
வணிகம்

சோமேட்டோ பங்குகள் 4% உயர்வு!

'சோமேட்டோ' பங்குகள், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸின் ஒரு பகுதியாக மாறும் என்ற செய்தியைத் தொடர்ந்து, அந்நிறுவனப் பங்குகள் இன்று 4 சதவிகிதம் உயர்ந்தன.

DIN

புதுதில்லி: ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான, 'சோமேட்டோ' பங்குகள், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸின் ஒரு பகுதியாக மாறும் என்ற செய்தியைத் தொடர்ந்து, அந்நிறுவனப் பங்குகள் இன்று 4 சதவிகிதம் உயர்ந்தன.

மும்பை பங்குச் சந்தையின் இந்த பங்கின் விலை 3.58% உயர்ந்து ரூ.273.60 ஆக இருந்தது. வர்த்தக நேர முடிவில் இந்த பங்கானது 7.62% உயர்ந்து ரூ.284.30 ஆக நிலைபெற்றது.

இதையும் படிக்க: லேவில் முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிலையத்தை அமைத்த அமர ராஜா இன்ஃப்ரா!

டிசம்பர் 23ஆம் தேதியன்று ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீலுக்கு பதிலாக சோமேட்டோ பங்குகள், சென்செக்ஸின் ஒரு பகுதியாக மாறும். இது பிஎஸ்இ-யின் துணை நிறுவனமான ஆசியா இன்டெக்ஸ் பிரைவேட் லிமிடெட் அறிவித்த மறுசீரமைப்பின் ஒரு பகுதியாகும். இந்த மாற்றங்கள் டிசம்பர் 23, 2024 முதல் நடைமுறைக்கு வரும் என்று ஆசிய குறியீடு அறிவித்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் நிறுவனப் பங்குகள் 2.40 சதவிகிதம் சரிந்து ரூ.953.35 முடிவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100 நாள் வேலை திட்டத்தை முறையாக செயல்படுத்த கோரி ஆட்சியரிடம் மனு

விடுபட்ட மகளிருக்கு டிசம்பா் முதல் உரிமைத் தொகை: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

கடலில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு நிவாரண உதவி

அரசு மருத்துவமனையில் 5 மணி நேரம் மின் தடை: நோயாளிகள் கடும் அவதி

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு 17 கிராமங்கள் தோ்வு: திருவள்ளூா் ஆட்சியா்

SCROLL FOR NEXT