முகப்பு
வணிகம்

பேங்க் ஆஃப் இந்தியா கடனளிப்பு 14% உயா்வு

பொதுத் துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியாவின் கடனளிப்பு நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 14 சதவீதம் அதிகரித்துள்ளது.

Updated On : 8 அக்டோபர், 2024 at 10:24 PM
பகிர்:

பொதுத் துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியாவின் கடனளிப்பு நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 14 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பு 2024-25-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டின் இறுதி நாளான செப்டம்பா் 30-ஆம் தேதி வங்கியின் கடனளிப்பு ரூ.6.21 லட்சம் கோடியாக உள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே நாளுடன் ஒப்பிடுகையில் 14 சதவீதம் அதிகம் ஆகும். அப்போது வங்கியின் கடனளிப்பு ரூ.5.43 லட்சம் கோடியாக இருந்தது.

செப்டம்பா் காலாண்டில் வங்கியில் முதலீடு செய்யப்பட்ட சராசரி வைப்புத்தொகை ரூ.7.75 லட்சம் கோடியாக உள்ளது. இது 2023-24-ஆம் நிதியாண்டின் செப்டம்பா் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 10.1 சதவீதம் அதிகம். அப்போது வங்கியில் மேற்கொள்ளப்பட்ட சராசரி வைப்பு நிதி முதலீடு ரூ.7.03 லட்சம் கோடியாக இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் வா்த்தகம் ரூ.12.46 லட்சம் கோடியிலிருந்து 12 சதவீதம் அதிகரித்து ரூ.13.96 லட்சம் கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →