முகப்பு
வணிகம்

சென்செக்ஸ் 800 புள்ளிகள் வீழ்ச்சி; 23 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த நிஃப்டி

சென்செக்ஸ் 800 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது. 23 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து வணிகமான நிஃப்டி.

Updated On : 4 ஏப்ரல், 2025 at 9:05 AM
கோப்புப்படம்.
பகிர்:

மும்பை: வணிகத்தின் இறுதிநாளான வெள்ளிக்கிழமை காலை வணிகம் தொடங்கியபோதே, தகவல்தொழில்நுட்ப நிறுவனப் பங்குகளின் வீழ்ச்சியால், வணிகமும் சரிவுடன் காணப்பட்டது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்பினால் உலகளவில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்படலாம் என்ற அச்ச உணர்வு காரணமாக, பங்குச் சந்தைகளில் இன்று வீழ்ச்சி காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சென்செக்ஸ் வணிகத்தில் டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ், எல்அன்ட்டி, மாருதி, டெக் மகிந்திரா உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இவற்றின் பங்குகள் 3.5 சதவீதம் வரை சரிந்தது. அதேவேளையில் எச்டிஎஃப்சி வங்கி, பாரதி ஏர்டெல், பஜாஜ் பைனான்ஸ், எம்அன்ட்எம் பங்குகள் லாபத்துடன் வணிகத்தைத் தொடங்கின.

இன்றைய பங்குச் சந்தை வீழ்ச்சியால் முதலீட்டாளர்களின் ரூ.9 லட்சம் கோடி முதலீடு நஷ்டத்தைச் சந்தித்திருப்பதாகவும், பொருளாதார நெருக்கடி நிலை அச்சமே இதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

இன்றைய வணிகத்தின் இடையே சென்செக்ஸ் அதிகபட்சமாக 1,009.07 புள்ளிகள் வரை சரிவைச் சந்தித்து, 75,286.29 என்ற அளவிலும், நிஃப்டி 375.7 புள்ளிகள் சரிந்து 22,874.40 என்ற அளவிலும் வணிகமாகின.

ஒட்டுமொத்தமாக, தகவல்தொழில்நுட்பத் துறை, மருந்து தயாரிப்பு நிறுவனம் மற்றும் உலோக நிறுவனப் பங்குகள்தான் அதிகம் வீழ்ச்சியடைந்துள்ளன. மேலும், 2,496 பங்குகள் சரிவையும் 834 நிறுவனப் பங்குகள் லாபத்தையும் 116 பங்குகள் மாற்றமின்றியும் வணிகமானது.

முழு கட்டுரையைப் படிக்க →