வணிகம்

பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸ் பங்குகள் 18% சரிவு!

பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கிரிஷ் கௌஸ்கி தனது ராஜினாமாவை அறிவித்ததையடுத்து நிறுவனத்தின் பங்குகள் 18% சரிந்தன.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கிரிஷ் கௌஸ்கி தனது ராஜினாமாவை அறிவித்ததையடுத்து நிறுவனத்தின் பங்குகள் 18% சரிந்தன.

பிஎஸ்இ-யில் அதன் பங்கு 18.06 சதவிகிதம் சரிந்து ரூ.808.05 ஆக இருந்தது. பகலில் அது 18.54 சதவிகிதம் சரிந்து ரூ.803.30ஆக இருந்தது.

என்எஸ்இ-யில் அதன் பங்கு 17.74 சதவிகிதம் சரிந்து ரூ.811.15 ஆக உள்ளது.

ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட வாரியம், அக்டோபர் 28, 2025 முதல் அமலுக்கு வரும் என்றும், மேலும் அதன் துணை நிறுவனங்களிலிருந்தும் கௌஸ்கி விலகுவார் என்றது.

கௌஸ்கி கட்டியெழுப்ப உதவிய வலுவான அடித்தளத்தின் அடிப்படையில் வணிக கவனம் மற்றும் வளர்ச்சிப் பாதை உறுதியாக இருப்பதாக நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளாதக பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸ் தெரிவித்துள்ளது.

வாரியத்தின் நியமனம் மற்றும் ஊதியக் குழுவின் தலைவர் ஆர். சந்திரசேகரன், பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸின் பாரம்பரியத்தை மேலும் மேம்படுத்தும் புதிய தலைவரை விரைவில் நியமிக்க நிறுவனம் கடுமையான, வெளிப்படையான மற்றும் தகுதி அடிப்படையிலான தேர்வு செயல்முறையைத் தொடங்கும் என்றார்.

இதையும் படிக்க: டாடா பவர் லாபம் ரூ.1,262 கோடியாக அதிகரிப்பு!

PNB Housing Finance Shares Plunge 18% on CEO Resignation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT