டாடா பவர் லாபம் ரூ.1,262 கோடியாக அதிகரிப்பு!
ஜூன் வரையான காலாண்டு முடிவில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 6%-க்கும் மேலாக உயர்ந்து ரூ.1,262 கோடியாக உள்ளது.
புதுதில்லி: புதுப்பிக்கத்தக்க மற்றும் பரிமாற்றம் மற்றும் விநியோக வணிகத்திலிருந்து அதிக வருவாய் கிடைத்ததன் காரணமாக, ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 6%-க்கும் மேலாக உயர்ந்து ரூ.1,262 கோடியாக உள்ளது.
2024 ஜூன் முடிய உள்ள காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,189 கோடியாக இருந்ததாக நிறுவனம் தெரிவித்ததது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.16,810 கோடியாக இருந்த வருவாய் இந்த காலாண்டில் அது ரூ.17,464 கோடியாக உயர்ந்துள்ளது.
Advertisement
Advertisement
மின் உற்பத்தி மற்றும் பரிமாற்றம் மற்றும் விநியோகத் தொழில்கள் குறிப்பிடத்தக்க லாபத்தை ஈட்டி வருவதாகவும் டாடா பவரின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் பிரவீர் சின்ஹா தெரிவித்தார்.
நிறுவனம் 1 கோடியே 30 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான மின்சாரத்தை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.87.53 ஆக நிறைவு!
The company had a net profit of Rs 1,189 crore in the quarter ended June 30, 2024
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.