முகப்பு
வணிகம்

டாடா ஸ்டீல் 3வது காலாண்டு நிகர லாபம் அதிகரிப்பு!

டாடா ஸ்டீல் அதன் ஒருங்கிணைந்த லாபம் பல மடங்கு அதிகரித்து ரூ. 2,730.37 கோடியாக இருப்பதாக அறிவித்துள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 6:35 PM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 6:05 PM

புதுதில்லி: டிசம்பர் உடன் முடிவடைந்த 3வது காலாண்டில், டாடா ஸ்டீல், அதன் ஒருங்கிணைந்த லாபம் பல மடங்கு அதிகரித்து ரூ. 2,730.37 கோடியாக இருப்பதாக அறிவித்துள்ளது.

இங்கிலாந்தில் குறைந்த செலவிலான எஃகு உற்பத்திக்கு நிறுவனம் மாறிக்கொண்டிருக்கும் நிலையைத் தவிர, மற்ற அனைத்து செயல்பாடுகளிலும் வருவாய் அதிகரித்ததே இதற்குக் காரணம் என்றது நிறுவனம்.

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 6:25 PM

கடந்த நிதியாண்டின் 3வது காலாண்டில் நிறுவனம் ரூ. 295.49 கோடி லாபம் ஈட்டியிருந்தது. அதே வேளையில், நிதியாண்டின் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் கடந்த ஆண்டு இதே காலகட்டத்திலிருந்த ரூ. 53,869.33 கோடியிலிருந்து ரூ. 57,503.49 கோடியாக உயர்ந்துள்ளது.

Advertisement

வருவாய் பெறுத்த வரையில், டாடா ஸ்டீல் இந்தியா மற்றும் நீலாச்சல் இஸ்பத் நிகம் ஆகியவை ரூ. 37,141.51 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது நிதியாண்டின் 3வது காலாண்டில் ஈட்டிய ரூ. 34,218.73 கோடியை விட அதிகம்.

summary

Tata Steel on Friday said its consolidated profit jumped manifold to Rs 2,730.37 crore in the December quarter.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.