ஜிஎஸ்டி மோசடி மூலம் ரூ.3,000 கோடி வரி ஏய்ப்பு!
போலியான பான் மற்றும் ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட 489 போலியான ஜிஎஸ்டி மோசடி பதிவுகள் கண்டறியப்பட்டுள்ளன.
புதுதில்லி: போலியான பான் மற்றும் ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தி அக்டோபர் மாதத்தில் 489 போலியான ஜிஎஸ்டி பதிவுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ரூ.3,000 கோடிக்கும் அதிகமான வரி ஏய்ப்பு நடைபெற்று உள்ளதாக நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2024-25 நிதியாண்டில், போலியான பான் மற்றும் ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தி 3,977 போலிப் பதிவுகள் கண்டறியப்பட்டன. இதன் மூலம் ரூ. 13,109 கோடி வரி ஏய்ப்பு அரங்கேறியுள்ளது. அதே வேளையில் 2023-24 நிதியாண்டில், இது போன்ற 5,699 போலிப் பதிவுகள் கண்டறியப்பட்டு, இதன் மூலம் ரூ.15,085 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளது.
இந்த ஆண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையான காலத்தில், ஜிஎஸ்டி அதிகாரிகள் 16 பேரை கைது செய்துள்ளனர். இதுவே 2025 மற்றும் 2024 நிதியாண்டுகளில் முறையே 50 மற்றும் 67 நபர்களை கைது செய்துள்ளனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் சரிந்து ரூ.90.74 ஆக நிறைவு!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.