பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!
இன்றைய பங்குச்சந்தை நிலவரம் பற்றி...
வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 85,145.90 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 477.11 புள்ளிகள் அதிகரித்து 85,406.47 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 167.55 புள்ளிகள் உயர்ந்து 26,133.95 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
Advertisement
Advertisement
கடந்த வாரம் பங்குச்சந்தைகள் சரிவைச் சந்தித்த நிலையில் இந்த வாரம் முதல் நாளே ஏற்றம் கண்டு வருகிறது.
ஐடி மற்றும் உலோகத் துறைப் பங்குகள் அதிகம் வாங்கப்பட்டதன் காரணமாக பங்குச்சந்தைகள் நேர்மறையில் வர்த்தகமாகி வருகின்றன.
இன்போசிஸ், பாரதி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ் பிவி, டிரெண்ட் ஆகியவை சென்செக்ஸில்அதிக லாபம் ஈட்டிய பங்குகளாக உள்ளன.
அல்ட்ராடெக் சிமென்ட், பவர் கிரிட் ஆகியவை அதிக நஷ்டமடைந்த பங்குகளாகும் .
துறைவாரியாக, நிஃப்டி ஐடி, மெட்டல் குறியீடுகள் தலா 1 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து அதிக லாபத்தை ஈட்டியுள்ளன. மீடியா, நுகர்வோர் பொருள்கள் குறியீடுகளும் முன்னேற்றம் அடைந்துள்ளன.
நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.6 சதவீதமும் ஸ்மால்கேப் குறியீடு 0.67 சதவீதமும் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.
Stock Market: Infosys, Airtel lift Sensex 500 pts; Nifty above 26,100
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.