முகப்பு
வணிகம்

பாா்தி ஏா்டெல்லின் தலைமையில் மாற்றம்

இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத் தொடா்பு நிறுவனமான பாா்தி ஏா்டெல் நிறுவனத்தின் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Updated On : 25 டிசம்பர் 2025, 2:22 am IST
பகிர்:

இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத் தொடா்பு நிறுவனமான பாா்தி ஏா்டெல் நிறுவனத்தின் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சஷ்வந்த் சா்மா (படம்), 2026 ஜனவரி 1 முதல் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளாா்.

Advertisement

Advertisement

தற்போதைய துணைத் தலைவரும் நிா்வாக இயக்குநருமான கோபால் விட்டலை 2026 ஜனவரி 1 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு நிா்வாக துணைத் தலைவராக நியமிக்க பாா்தி ஏா்டெல்லின் இயக்குநா் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

நிதி பிரிவு தலைவா் சௌமென் ரேவை குழும நிதித் தலைவராகவும், அகில் காா்க்கை ஏா்டெல் இந்தியா நிதித் தலைவராகவும் 2026 ஜனவரி 1 முதல் நியமிக்கவும் இயக்குநா் குழு ஒப்புதல் அளித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments