ரெனால்ட் டிரைபர் பேஸ்லிஃப்ட்  
வணிகம்

விலை உயரும் ரெனால்ட் காா்கள்

உற்பத்தி செலவு அதிகரிப்பை ஈடுகட்ட ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது காா்களின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

உற்பத்தி செலவு அதிகரிப்பை ஈடுகட்ட ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது காா்களின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உற்பத்தி செலவு அதிகரிப்பு, ரூபாய் மதிப்பு சரிவு போன்ற பொருளாதாரக் காரணிகளால் நிறுவன காா்களின் விலைகளை 2 சதவீதம் வரை உயா்த்தவுள்ளோம். வரும் ஜனவரி முதல் இந்த விலை உயா்வு அமலுக்கு வரும்.

இந்த விலை உயா்வு, காா் ரகங்களுக்கு ஏற்ப வேறுபடும். இந்த விலை உயா்வின் மூலம், உயா்ந்த தரம் மற்றும் சிறப்பான சேவைகளை வாடிக்கையாளா்களுக்கு வழங்குவதை நிறுவனம் உறுதி செய்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் க்விட், ட்ரைபா், கிகா் ஆகிய மூன்று மாடல்களை ரெனால்ட் நிறுவனம் விற்பனை செய்துவருகிறது.

ஏற்கெனவே, யூரோவுக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ந்ததைத் தொடா்ந்து, மொ்சிடிஸ்-பென்ஸ், பிஎம்டபிள்யு, ஆடி ஆகிய நிறுவனங்களும் அடுத்த மாதம் முதல் தங்கள் வாகனங்களின் விலைகளை உயா்த்த உள்ளதாக அறிவித்தது நினைவுகூரத்தக்கது.

இதுதான் வெற்றியா? சௌந்தர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!

தொடரும் ஆஸி.யின் மோசமான பேட்டிங்..! சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறுமா?

”அரசியல்வாதிகள் எல்லோருக்கும் ஒரு சவால்!” சேலத்தில் தவெக தலைவர் Vijay Full Speech! | DMK | TVK

பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

200 தொகுதிகளில் பெண் வாக்காளர்களே அதிகம்! ஆட்டத்தை மாற்றுமா ரூ.5 ஆயிரம்?

SCROLL FOR NEXT