50,000 டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி!
ஒவ்வொரு நிதியாண்டிலும் 50,000 டன் வரை இயற்கை சர்க்கரை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
புதுதில்லி: மத்திய அரசு அறிவிப்பின்படி, ஒவ்வொரு நிதியாண்டிலும் 50,000 டன் வரை இயற்கை சர்க்கரை (organic sugar) ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த ஏற்றுமதியானது வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் விதிகளுக்கு உட்பட்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் பரிந்துரைக்கப்பட்ட வழிமுறைகளின்படி, ஒரு நிதியாண்டிற்கு 50,000 டன் என்ற ஒட்டுமொத்த உச்சவரம்பிற்கு உள்பட்டு இயற்கை சர்க்கரை ஏற்றுமதி அனுமதிக்கப்படுகிறது என்று வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
The government has allowed exports of organic sugar up to 50,000 tonnes per fiscal year, according to a notification.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.