பங்குச் சந்தை 
வணிகம்

வாரத்தின் முதல் நாளில் சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை!

இன்றைய பங்குச் சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது...

DIN

பங்குச் சந்தை கடந்த வாரம் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் இந்த வாரத்தின் முதல் வணிக நாளான இன்றும் சரிவுடனே தொடங்கியுள்ளது.

இன்று காலை 10.45 மணி நிலவரப்படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 680 புள்ளிகள் சரிந்து 75,510.85 புள்ளிகளில் வணிகம் நடைபெற்று வருகின்றது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 234 புள்ளிகள் சரிந்து 22,858.30 புள்ளிகளில் வணிகமாகி வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை 76,190.46 புள்ளிகள் சரிந்திருந்த சென்செக்ஸ், மேலும் 490 புள்ளிகள் சரிந்து 75,700.43 புள்ளிகளாக இன்று வணிகம் தொடங்கியது.

கடந்த வெள்ளிக்கிழமை 23,092.20 புள்ளிகளில் முடிந்த தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, இன்று சற்றே புள்ளிகள் உயர்ந்து 23,183.903 புள்ளிகளுடன் தொடங்கியது.

இன்றைய வணிகத்தில் பிரிட்டானியா, ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளன.

அதேபோல ஹீரோ மோட்டார், மாருதி, ஆசியன் பெயிண்ட், ஐடிசி, பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, சன் பார்மா, இன்போசிஸ் போன்ற பங்குகளின் விலை சரிந்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதீத அா்ப்பணிப்புடன் தேச சேவையாற்ற வேண்டும்: தில்லிவாசிகளுக்கு துணை நிலை ஆளுநா் வேண்டுகோள்

தில்லி, என்சிஆரில் தமிழ் அமைப்புகள் சாா்பில் சுதந்திர தின கொண்டாட்டம்

தலைநகரில் சுதந்திர தினத்தை வரவேற்ற மழை!

காவல்நிலைய தலைமைக் காவலருக்கு லஞ்சம்: விடியோ காட்சியால் விசாரணைக்கு உத்தரவு

தலைநகரில் அடுத்த சில நாள்கள் மழைக்கு வாய்ப்பு: ஐஎம்டி

SCROLL FOR NEXT