முகப்பு
வணிகம்

பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிகர லாபம் இரட்டிப்பு!

பொதுத் துறையைச் சேர்ந்த, பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிகர லாபம் 2024 டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், இரு மடங்கு அதிகரித்து ரூ.4,508 கோடி ரூபாயாக உள்ளது.

Updated On : 31 ஜனவரி 2025, 5:04 pm IST
பஞ்சாப் நேஷனல் பேங்க்
பகிர்:

புதுதில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த, பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிகர லாபம் 2024 டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், இரு மடங்காக அதிகரித்து ரூ.4,508 கோடி ரூபாயாக உள்ளது.

கடந்த ஆண்டு இதே காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.2,223 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வருமானம் ரூ.29,962 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.34,752 கோடியானது. அதே வேளையில் வட்டி வருமானமும் ரூ.27,288 கோடியிலிருந்து ரூ.31,340 கோடியாக உயர்ந்துள்ளது.

அதேபோல் வங்கியின் நிகர வாராக் கடன் ஒரு வருடத்திற்கு முன்பு 6.24 சதவிகிதத்திலிருந்து 4.09 சதவிகிதமாக குறைந்துள்ளது.

Advertisement

Advertisement

இதேபோல் வங்கியின் மூன்றாவது காலாண்டு முடிவில் வங்கியின் நிகர வாராக் கடன் 0.96 சதவிகிதத்திலிருந்து 0.41 சதவிகிதமாக குறைந்துள்ளது. இதன் விளைவாக, வாராக் கடனுக்கான ஒதுக்கீடு கணிசமாகக் குறைந்து ரூ.318 கோடியானது. இதுவே ஓராண்டுக்கு முன்பு ரூ.2,994 கோடியாக இருந்தது.

இதையும் படிக்க: 53% அதிகரித்த ஆடம்பர வீடுகள் விற்பனை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments