புதிதாக 23 நகரங்களில் 5ஜி சேவையைத் தொடங்கிய வோடாஃபோன் - ஐடியா!
வோடாஃபோன் - ஐடியா நிறுவனம் புதிதாக 23 நகரங்களில் 5ஜி இணைய சேவையைத் தொடங்கியுள்ளது.
வோடாஃபோன் - ஐடியா நிறுவனம் புதிதாக 23 நகரங்களில் 5ஜி இணைய சேவையை விரிவாக்கம் செய்துள்ளது.
பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுப்பதற்கும், அடுத்த தலைமுறை பயனர்களைக் கவரும் வகையிலும் இதனை வோடாஃபோன் - ஐடியா செய்துள்ளது.
ஜியோ, ஏர்டெல் நிறுவனம் 5 ஜி இணைய சேவையை வழங்குவதில் முன்னணியில் இருப்பதால், அவர்களுக்கு ஈடுகொடுத்து தனது பயனர்களின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக 5ஜி சேவைகளை வோடாஃபோன் - ஐடியா நிறுவனம் விரிவாக்கம் செய்து வருகிறது.
Advertisement
அந்தவகையில், அகமதாபாத், ஆக்ரா, ஒளரங்கபாத், கோழிக்கோடு, கொச்சி, இந்தூர், டேராடூன், ஜெய்ப்பூர், கொல்கத்தா, லக்னெள, மதுரை, மலப்புரம், மீரட், நாக்பூர், நாசிக், ராஜ்கோட், சோனிபட், சூரத், சிலிகுரி, திருவனந்தபுரம் மற்றும் வதோதரா ஆகிய நகரங்களில் 5 ஜி சேவையைத் தொடங்கியுள்ளது.
சமீபத்தில் பெங்களூரு, தில்லி, மும்பை, சண்டிகர் மற்றும் பாட்னா ஆகிய நகரங்களில் 5 ஜி சேவையை வோடாஃபோன் - ஐடியா நிறுவனம் தொடங்கியிருந்த நிலையில், தற்போது கூடுதலாக 23 நகரங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
அளவற்ற 5 ஜி பயன்பாடு
வோடாஃபோன் - ஐடியா பயனர்கள் ரூ. 299-ல் தொடங்கும் குறிப்பிட்ட பிரீபெட் திட்டங்களுக்கு வரம்பற்ற 5 ஜி சேவை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | நத்திங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்! இன்று முதல் அறிமுகம்!
Vodafone Idea (Vi) announcing the extension of 5G network infrastructure into twenty-three more cities.