டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 29 காசுகள் சரிந்து ரூ.85.90ஆக முடிவு!
தொடர்ந்து இரண்டாவது நாளாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 29 காசுகள் குறைந்து 85.90 ஆக இன்று நிறைவடைந்தது.
மும்பை: தொடர்ந்து இரண்டாவது நாளாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 29 காசுகள் குறைந்து 85.90 ஆக இன்று (புதன்கிழமை) நிறைவடைந்தது.
ரஷ்யா-உக்ரைன் இடையேயான பதட்டங்கள் மற்றும் அதிகரித்த கச்சா எண்ணெய் விலைகள் காரணமாகவும் மற்றும் முதலீட்டாளர்கள் ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை அறிவிப்பு குறித்து காத்திருந்ததாக அந்நிய செலவானி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கலாம் என்றும், அடுத்த கொள்கையில் இதே போன்ற மற்றொரு குறைப்பு இருக்கலாம் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். ஜூன் மாதத்தில் மத்திய வங்கி 50 அடிப்படைப் புள்ளிகள் குறைப்புக்கு உட்படும் என்று எஸ்பிஐ எதிர்பார்க்கிறதாக தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இதனிடையில், வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.69 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.85.69 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.86.05 ஐ தொட்ட நிலையில், முடிவில் 29 காசுகள் சரிந்து ரூ.85.90ஆக முடிந்தது.
இதையும் படிக்க: 3 நாள் சரிவுக்கு பிறகு சென்செக்ஸ், நிஃப்டி உயர்ந்து முடிவு!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.