வணிகம்

டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் 2.77% பங்குகளை கையகப்படுத்திய மோதிலால் ஓஸ்வால்!

நொய்டாவை தளமாகக் கொண்ட டிக்சன் டெக்னாலஜிஸ் (இந்தியா) நிறுவனத்தின் 2.77% பங்குகளை ரூ.2,221 கோடிக்கு ஒப்பந்தத்தின் மூலம் கைமாறி உள்ளது.

DIN

புதுதில்லி: நொய்டாவை தளமாகக் கொண்ட டிக்சன் டெக்னாலஜிஸ் (இந்தியா) நிறுவனத்தின் உரிமையாளரான சுனில் வச்சானி தனது 2.77% பங்குகளை அதாவது 16.70 லட்சம் பங்குகளை ரூ.2,221 கோடிக்கு ஒப்பந்தத்தின் மூலம் கைமாறியதாக இன்று தெரிவித்தார்.

பங்குகள் ஒவ்வொன்றும் ரூ.13,301.47 விலையில் கைமாறியதாகவும், இதன் ஒப்பந்த மதிப்பு ரூ.2,221.34 கோடி என்றது. பங்கு விற்பனையைத் தொடர்ந்து, டிக்சனில் வச்சானியின் பங்கு 5.34 சதவிகிதத்திலிருந்து 2.57 சதவிகிதமாகக் குறைந்தது.

இதற்கிடையில், மோதிலால் ஓஸ்வால் மியூச்சுவல் ஃபண்ட் இரண்டு பகுதிகளாக 14.45 லட்சம் பங்குகளை வாங்கியுள்ளது. இதன் மூலம் டிக்சன் டெக்னாலஜிஸில் 2.39 சதவிகித பங்குகளை தலா ஒன்றுக்கு ரூ.13,307.96 என்று விலையில் மொத்தமாக ரூ.1,924 கோடிக்கு வாங்கி உள்ளது மோதிலால் ஓஸ்வால்.

பங்குகளை வாங்கிய பிறகு, டிக்சன் டெக்னாலஜிஸில் மோதிலால் ஓஸ்வால் மியூச்சுவல் ஃபண்டின் பங்குகள் 2.24 சதவிகிதத்திலிருந்து 4.63 சதவிகிதமாக உயர்ந்தன.

மும்பை பங்குச் சந்தையில் டிக்சன் டெக்னாலஜிஸ் (இந்தியா) பங்குகள் 3.55 சதவிகிதம் உயர்ந்து ரூ.14,554.10 ஆக முடிவடைந்தது.

இதையும் படிக்க: எரிசக்தி குழாய் திறனில் ரூ.844 கோடி முதலீடு செய்யும் கெயில்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திப்பு சுல்தானையும் சத்ரபதி சிவாஜியையும் ஒப்பிடுவதை எதிர்க்கிறோம்: மகாராஷ்டிர முதல்வர்

விவசாயிகளின் அடித்தளம் இல்லாமல் எதையும் கட்டமைக்க முடியாது: ராகுல்!

பாகிஸ்தானில் காவலர்கள் 2 பேர் கடத்தி கொலை

நல்லகண்ணுவுக்கு இறுதி அஞ்சலி! 'வீர வணக்கம்' என முழக்கமிட்ட மு.க. ஸ்டாலின்!

ஜிம்பாப்வேவை லேசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; இந்திய அணியை எச்சரிக்கும் முன்னாள் கேப்டன்!

SCROLL FOR NEXT