சித்தரிக்கப்பட்டது | மும்பை பங்குச் சந்தை 
வணிகம்

சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு! ஏற்றத்துடன் முடிந்த பங்குச் சந்தை!

பங்குச்சந்தை இன்று(மார்ச் 6) ஏற்றத்துடன் நிறைவு பெற்றது.

DIN

பங்குச்சந்தை இன்று(மார்ச் 6) ஏற்றத்துடன் நிறைவு பெற்றது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
74,308.30 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

பிற்பகல் 12.30 மணியளவில், சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்த நிலையில் வர்த்தக நேர முடிவில் 609.87 புள்ளிகள் உயர்ந்து 74,340.09 என்ற புள்ளிகளில் நிறைவு பெற்றது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 207.40 புள்ளிகள் உயர்ந்து 22,544.70 புள்ளிகளில் முடிவடைந்தது.

நிஃப்டி மெட்டல், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய நிறுவனங்கள் ஏற்றம் கண்டன.

மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.65%, 1.63% உயர்ந்துள்ளன.

ரிலையன்ஸ், ஆக்சிஸ் வங்கி, டிசிஎஸ், என்டிபிசி, ஏசியன் பெயிண்ட்ஸ், உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன.

அதேநேரத்தில் டெக் மஹிந்திரா, கோட்டக் பேங்க், ட்ரென்ட், பவர் கிரிட், ஹெச்டிஎப்சி லைஃப், பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.

மொத்த பங்குகளில் 1,009 பங்குகள் விலை குறைந்தும் 2,987 பங்குகள் விலை அதிகரித்தும் 107 பங்குகள் விலை மாற்றமின்றியும் காணப்பட்டன.

ரூபாயின் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 15 பைசா குறைந்து 87.11 ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT