தனது கிளைகளை விரிவுபடுத்தும் கரூர் வைஸ்யா வங்கி!
தனியார் துறை துறையைச் சேர்ந்த, கரூர் வைஸ்யா வங்கி ஆந்திரா, கர்நாடகம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் தலா ஒன்று என மூன்று புதிய கிளைகளைத் திறந்துள்ளதாக அறிவித்தது.
சென்னை: தனியார் துறை துறையைச் சேர்ந்த, கரூர் வைஸ்யா வங்கி ஆந்திரா, கர்நாடகம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் தலா ஒன்று என மூன்று புதிய கிளைகளைத் திறந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் அதன் ஒட்டுமொத்த கிளைகளின் எண்ணிக்கை 880 ஆக உயர்ந்துள்ளது.
வங்கி சமீபத்தில் ஓங்கோல், பெங்களூரு மற்றும் வேலூரில் உள்ள பாகயம் ஆகிய இடங்களில் புதிய கிளைகளைத் திறந்தது. அதே வேளையில், கரூர் வைஸ்யா வங்கி நடப்பு நிதியாண்டில் 38 கிளைகளைத் திறந்துள்ளது என்று தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
புதிய கிளைகள் மூலம் முழு அளவிலான வங்கி மற்றும் வணிக சேவைகளையும், மூன்றாம் தரப்பு அப்கள் மூலம் காப்பீட்டு சேவைகளையும் வழங்கும்.
Advertisement
Advertisement
டிசம்பர் 31, 2024 நிலவரப்படி, கரூர் வைஸ்யா வங்கியின் மொத்த வணிகம் ரூ.1,81,993 கோடி ஆக உள்ளது. கடந்த நிதியாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.1,605 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 9 நகரங்களில் 12% அதிகரித்த வீடுகள் விற்பனை
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.