PTI Graphics
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 36 காசுகள் உயர்ந்து ரூ.86ஆக முடிவு!

உள்நாட்டு பங்குச் சந்தைகளின் உயர்வு மற்றும் அந்நிய மூலதன வரத்து காரணமாக இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 36 பைசா உயர்ந்து ரூ.86-ஆக முடிந்தது.

DIN

மும்பை: உள்நாட்டு பங்குச் சந்தைகளின் உயர்வு மற்றும் அந்நிய மூலதன வரத்து காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 36 காசுகள் உயர்ந்து ரூ.86-ஆக நிலைபெற்றது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 86.26 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், இது பிறகு அதிகபட்சமாக ரூ.85.93 ஆகவும், பிறகு குறைந்தபட்சமாக ரூ.86.30 ஐ தொட்ட நிலையில், முடிவில் 36 காசுகள் உயர்ந்து ரூ.86-ஆக முடிந்தது.

நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு 1 காசு உயர்ந்து ரூ.86.36 ஆக முடிவடைந்தது.

ரூபாயின் மதிப்பு தொடர்ந்து ஆறாவது அமர்வாக அதிகரித்து, இது நாள் வரையில் 123 காசுகள் உயர்ந்துள்ளது.

இதையும் படிக்க: தொடர்ந்து ஐந்தாவது நாளாக உயர்ந்து முடிந்த பங்குச் சந்தை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்பெயின் சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப்!

அழகான அதிகாரம்... ஜனனி!

தீபாவளி கூட்ட நெரிசலைத் தவிர்க்க ரயில்வே நடைமேடை டிக்கெட்டுகள் விற்பனை நிறுத்தம் -வடக்கு ரயில்வே

ஸுபீன் கார்க் வழக்கு: கைதிகளை சிறை மாற்றும்போது காவல் துறை வாகனத்திற்கு தீ வைப்பு!

மாஸ்கோவில் புதினுடன் சிரியாவின் இடைக்கால அதிபர் சந்திப்பு!

SCROLL FOR NEXT