முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த டியூப் இன்வெஸ்ட்மென்ட் ஆஃப் இந்தியா லிமிட்டெட் (டிஐஐஎல்), கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் ரூ.880 கோடி மொத்த லாபம் ஈட்டியுள்ளது.
இது குறித்து நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 2024-25-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் நிறுவனம் ஈட்டியுள்ள வரிக்கு முந்தைய லாபம் ரூ.880 கோடியாகப் பதிவாகியுள்ளது.
முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.1,962 கோடியாக இருந்த நிறுவனத்தின் வருவாய் கடந்த நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ.1,957 கோடியாகக் குறைந்துள்ளது.
2024-25-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் நிறுவனத்தின் வருவாய் ரூ.7,611 கோடியில் இருந்து ரூ.7,893 கோடியாக அதிகரித்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.