முகப்பு
வணிகம்

ரயில் விகாஸ் நிகாம் பங்குகள் 11% உயர்வு!

ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம் மின்சார இழுவை அமைப்பு ஒப்பந்தத்தை பெற்றதையடுத்து அதன் பங்கு 11 சதவிகிதம் உயர்ந்தது வர்த்தகமானது.

Updated On : 16 மே, 2025 at 10:20 AM
ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்
பகிர்:

ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம் மின்சார இழுவை அமைப்பு ஒப்பந்தத்தை பெற்றதையடுத்து அதன் பங்கு 11 சதவிகிதம் உயர்ந்தது வர்த்தகமானது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில், ரயில் விகாஸ் நிகாம் 10.56% அதிகரித்து ரூ.415.60க்கு வர்த்தகமானது.

மத்திய ரயில்வே நாக்பூர் பிரிவில் உள்ள இடார்சி - ஆம்லா பிரிவில் உள்ள ஃபீடிங் சிஸ்டத்தில் தற்போதுள்ள 1x25 கிலோவோல்ட் மின்சார இழுவை அமைப்பை 2x25 கிலோவோல்ட் ஆக மேம்படுத்துவதற்கான மேல்நிலை மின்மயமாக்கல் மாற்றியமைத்தல் பணிகளுக்காக நிறுவனம் மத்திய ரயில்வேயிடமிருந்து ஏற்பு கடிதத்தை பெற்றுது.

இந்த ஒப்பந்தம் ரூ.115,79,37,241.11 கோடி எனவும், இதை இரண்டு வருடங்களில் செயல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம் மே 21, 2025 அன்று நடைபெற உள்ள நிலையில், இதன் மூலம் மார்ச் 31, 2025 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான நிறுவனத்தின் தணிக்கை செய்யப்பட்ட நிதி முடிவுகளை பரிசீலித்து அங்கீகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

2024-25 நிதியாண்டிற்கான இறுதி ஈவுத்தொகை இருந்தால், அதை வாரியம் பரிந்துரைக்கும் என்றது.

இந்தப் பங்கு ஜூலை 15, 2024 மற்றும் மே 17, 2024 ஆகிய தேதிகளில், 52 வார அதிகபட்ச விலையான ரூ.647.00 மற்றும் குறைந்தபட்ச விலையான ரூ.280.65-ஐ எட்டியது.

தற்போது, ​​இந்தப் பங்கு 52 வார அதிகபட்ச விலையை விட 35.77 சதவிகிதம் குறைவாகவும், 52 வார குறைந்தபட்ச விலையை விட 48.08 சதவிகிதம் அதிகமாகவும் வர்த்தகமானது. அதே வேளையில் நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.86,653.44 கோடியாக உள்ளது.

இதையும் படிக்க: சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை!

முழு கட்டுரையைப் படிக்க →