முகப்பு
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இன்று சமமாக முடிவு!

கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தைகளில் எதிர்மறையான போக்கு காரணமாக இன்றைய வர்த்தகத்தில், ரூபாய் மதிப்பு சமமாக முடிந்தது.

Updated On : 28 மே 2025, 6:17 pm IST
- PTI Graphics
பகிர்:

மும்பை: கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தைகளில் எதிர்மறையான போக்கு காரணமாக இன்றைய நிலையற்ற வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு சமமாக முடிந்தது.

ஏப்ரல் மாதத்திற்கான தொழில்துறை உற்பத்தி எண்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும், அதே நேரத்தில் நிதியாண்டு 2026 முதல் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி புள்ளிவிவரங்கள் நாளை மறுநாள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், உள்நாட்டு மேக்ரோ பொருளாதார தரவுகளிலிருந்து வரும் குறிப்புகளுக்காக முதலீட்டாளர்கள் காத்திருந்ததாகவும் அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.59 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.85.33 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.85.72 ஐ தொட்ட நிலையில், முடிவில் ரூ.85.40-ஆக முடிந்தது.

Advertisement

Advertisement

நேற்று (செவ்வாய்க்கிழமை) டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 30 காசுகள் குறைந்து ரூ.85.40 ஆக முடிவடைந்தது.

இதையும் படிக்க: எஃப்எம்சிஜி, ஆட்டோ பங்குகள் சரிவால் சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments