புதுதில்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்றைய வர்த்தகத்தில் 3 காசுகள் சரிந்து ரூ.88.73 ஆக நிறைவடைந்தது. டாலரின் வலிமை மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை இதற்கு காரணமாக அமைந்தது.
பீகார் தேர்தலில் ஆளும் கூட்டணிக்கு கிடைத்த பெரும் வெற்றியைத் தொடர்ந்து உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட மீட்சி, ரூபாயின் மதிப்பை சரிந்த மட்டத்திலிருந்து சற்றே ஆதரித்ததாக அன்னிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.88.70 ஆக தொடங்கி, பிறகு குறைந்தபட்சமாக ரூ.88.75ஐ தொட்டு அதன் முந்தைய முடிவிலிருந்து 3 காசுகள் சரிந்து ரூ.88.73ஆக நிலைபெற்றது.
இதையும் படிக்க: பீகார் தேர்தல் முடிவுகள் எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.