புது தில்லி: டாடா பவர் ரினிவபிள் எனர்ஜி லிமிடெட், என்ஹெச்பிசி-யின் 300 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தின் பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியை செயல்படுத்தியுள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.
தனது அறிக்கையில், டாடா பவர் ரினிவபிள் எனர்ஜி லிமிடெட், ராஜஸ்தானின் பிகானரில் என்ஹெச்பிசி-யின் 450 மெகாவாட் (டிசி) /300 மெகாவாட் (ஏசி) சூரிய மின்சக்தி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
டாடா பவர் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு என்ஹெச்பிசி-க்குச் சொந்தமான பெரிய அளவிலான சூரிய மின்சக்தி திட்டத்தின், முழு மின்சாரத்தையும் பஞ்சாப் மாநில மின் கழக லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஐஆர்பி இன்ஃப்ரா டெவலப்பர்ஸ் பங்குகள் 4% உயர்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.