வணிகம்

திறன் விரிவாக்கத்திற்காக ரூ.910 கோடி முதலீடு செய்யும் டாடா கெமிக்கல்ஸ்!

மிதாப்பூர் மற்றும் கடலூரில் உள்ள அதன் ஆலைகளில் உற்பத்தி திறன் விரிவாக்கத்திற்காக அதன் வாரியம் அங்கீகரித்துள்ளதாக டாடா கெமிக்கல்ஸ் தெரிவித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: குஜராத்தில் உள்ள மிதாப்பூர் மற்றும் தமிழ்நாட்டில் கடலூரில் உள்ள அதன் ஆலைகளில் உற்பத்தி திறன் விரிவாக்கத்திற்காக ரூ.910 கோடி முதலீடு செய்ய அதன் வாரியம் அங்கீகரித்துள்ளதாக டாடா கெமிக்கல்ஸ் தெரிவித்துள்ளது.

நேற்று நடைபெற்ற கூட்டத்தில், நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, மிதாப்பூரில் அமைந்துள்ள அதன் ஆலையில் அடர்த்தியான சோடா சாம்பல் உற்பத்தி திறனை விரிவுபடுத்துவதற்காக ரூ.135 கோடி முதலீட்டை அங்கீகரித்துள்ளதாக டாடா கெமிக்கல்ஸ் தெரிவித்துள்ளது. அதே வேளையில், தமிழ்நாட்டின் கடலூரில் உள்ள அதன் ஆலையில் சிலிக்கா உற்பத்தி திறனை விரிவுபடுத்துவதற்காக ரூ.775 கோடி முதலீட்டையும் வாரியம் அங்கீகரித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) நிறுவனத்தின் பங்குகள் பிஎஸ்இ-யில் 1.09% குறைந்து ரூ.809.95 ஆக முடிவடைந்தன.

இதையும் படிக்க: 1:5 விகிதத்தில் பங்குப் பிரிவை அறிவித்துள்ள கோடக் மஹிந்திரா வங்கி!

Tata Chemicals said its board has approved an investment of Rs 910 crore for expansions of manufacturing capacities of its plants at Mithapur and Cuddalore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுகம் பல தரும் தமிழ்ப் பா... வாணி போஜன்!

பொன்னோவியம்... ஹரிஜா!

விஷ்ணு விஷாலின் ஆர்யன் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

உ.பி.: அரசு மருத்துவமனையில் இளம்பெண்ணுடன் நடனமாடிய மருத்துவர் மீது நடவடிக்கை

“G20 Leaders Summit 2025” பிரதமர் மோடியை வரவேற்ற தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ராமபோசா!

SCROLL FOR NEXT