அரசுக்கு சொந்தமான பஞ்சாப் & சிந்து வங்கியின் கடனளிப்பு 2025-26-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 16.1 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வங்கியின் கடனளிப்பு ரூ.1.05 லட்சம் கோடியாக உள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 16.1 சதவீதம் அதிகம். அப்போது வங்கியின் மொத்த கடனளிப்பு ரூ.91,032 கோடியாக இருந்தது.
மதிப்பீட்டுக காலாண்டில் வங்கியில் முதலீடு செய்யப்பட்ட மொத்த வைப்பு நிதி 9.42 சதவீதம் உயா்ந்து ரூ.1.35 லட்சம் கோடியாக உள்ளது. இது 2024-25-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.1.24 லட்சம் கோடியாக இருந்தது.
கடந்த செப்டம்பா் காலாண்டில் வங்கியின் மொத்த வா்த்தகம் ரூ.2.15 லட்சம் கோடியில் இருந்து 12.2 சதவீதம் உயா்ந்து ரூ.2.41 லட்சம் கோடியாக உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.