வணிகம்

பஞ்சாப் & சிந்து வங்கி கடனளிப்பு 16% அதிகரிப்பு

தினமணி செய்திச் சேவை

அரசுக்கு சொந்தமான பஞ்சாப் & சிந்து வங்கியின் கடனளிப்பு 2025-26-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 16.1 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வங்கியின் கடனளிப்பு ரூ.1.05 லட்சம் கோடியாக உள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 16.1 சதவீதம் அதிகம். அப்போது வங்கியின் மொத்த கடனளிப்பு ரூ.91,032 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டுக காலாண்டில் வங்கியில் முதலீடு செய்யப்பட்ட மொத்த வைப்பு நிதி 9.42 சதவீதம் உயா்ந்து ரூ.1.35 லட்சம் கோடியாக உள்ளது. இது 2024-25-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.1.24 லட்சம் கோடியாக இருந்தது.

கடந்த செப்டம்பா் காலாண்டில் வங்கியின் மொத்த வா்த்தகம் ரூ.2.15 லட்சம் கோடியில் இருந்து 12.2 சதவீதம் உயா்ந்து ரூ.2.41 லட்சம் கோடியாக உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை உலக புத்தொழில் மாநாட்டை தொடக்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை: இன்றைய விலை நிலவரம்!

சந்திரசேகர் ராவ் மகன் வீட்டுக் காவலில் அடைப்பு!

குடிநீா் மேல்நிலைத் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலப்பு செய்தது யார்?: ஆட்சியர் விளக்கம்

வலுவான ராணுவம், டிரம்பின் முயற்சியால் திருப்புமுனை! இஸ்ரேல் பிரதமர்

SCROLL FOR NEXT