வணிகம்

பண்டிகைக் காலம்: 1 லட்சத்தை கடந்த டாடா கார்கள் விற்பனை

நவராத்திரி முதல் தீபாவளி வரையிலான பண்டிகைக் காலத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன விற்பனை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: நவராத்திரி முதல் தீபாவளி வரையிலான பண்டிகைக் காலத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன விற்பனை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நவராத்திரியில் தொடங்கி தீபாவளி வரை 30 நாள்களுக்கு நீடித்த நடப்பாண்டின் பண்டிகைக் காலத்தில் நிறுவனம் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வாகனங்களை விற்பனை செய்தது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 33 சதவீத வளர்ச்சியாகும்.

மதிப்பீட்டுக் காலகட்ட விற்பனையில் எஸ்யுவி வாகனங்கள் முன்னிலை வகித்தன. மின்சார வாகனங்களும் வலுவான வளர்ச்சியை பதிவு செய்தன. நெக்ஸான் 38,000-க்கும் மேற்பட்ட வாகனங்களை விற்பனை செய்து 73 சதவீத வளர்ச்சியையும், பஞ்ச் 32,000 வாகனங்களை விற்பனை செய்து 29 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்தது.

இந்த காலகட்டத்தில் 10,000-க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள் விற்பனையாகி, 37 சதவீத வளர்ச்சியைக் கண்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பண்ருட்டியில் அதிகபட்சமாக 198 மி.மீ. மழை! சென்னையில் எவ்வளவு?

சென்னைக்கு எச்சரிக்கை! நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்ட உதயநிதி!

செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகளில் நீர் திறப்பு அதிகரிப்பு!

வாட்ஸ்ஆப் விடியோ அழைப்பு! ஏமாற்றப்பட்டவர் சொல்வது என்ன?

காஞ்சிபுரத்தில் 15 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது!

SCROLL FOR NEXT