பொதுத் துறையைச் சோ்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிகர லாபம், கடந்த செப்டம்பா் காலாண்டில் 14 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.4,904 கோடியாக உள்ளது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 14 சதவீதம் அதிகம். அப்போது வங்கி ரூ.4,303 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.
கடந்த நிதியாண்டின் செப்டம்பா் காலாண்டில் ரூ.34,474 கோடியாக இருந்த வங்கியின் மொத்த வருவாய் நடப்பாண்டின் அதே காலாண்டில் ரூ.36,214 கோடியாக அதிகரித்துள்ளது.
மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் நிகர வட்டி வருவாய் ரூ.10,496.5 கோடியிலிருந்து 0.26 சதவீதம் உயா்ந்து ரூ.10,523.5 கோடியாக உள்ளது.
2024 செப்டம்பா் இறுதியில் 4.48 சதவீதமாக இருந்த மொத்த வாராக் கடன் இந்த ஆண்டின் அதே நாளில் 3.45 சதவீதமாகவும், 0.46 சதவீதமாக இருந்த நிகர வாராக் கடன் 0.36 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.