பங்குச் சந்தை ANI
வணிகம்

சரிவில் பங்குச் சந்தை வர்த்தகம்! வங்கி, ஆட்டோ பங்குகள் உயர்வு!!

இன்றைய பங்குச் சந்தை நிலவரம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

நேற்று(வியாழன்) பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்த நிலையில் இன்றும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 84,379.79 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.15 மணியளவில் சென்செக்ஸ் 329.38 புள்ளிகள் குறைந்து 84,067.97 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 106.35 புள்ளிகள் குறைந்து 25,771.50 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

ஈச்சர் மோட்டார்ஸ், மாருதி சுசுகி, டிசிஎஸ், டைட்டன், பாரத் எலக்ட்ரானிஸ் அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களில் அடங்கும்.

அதேநேரத்தில் என்டிபிசி, மேக்ஸ், சிப்லா, ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.

அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக பதற்றம் தணிந்த நிலையிலும் பங்குச்சந்தை சரிவில் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களிடைய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

துறை ரீதியாக, உலோகம், சுகாதாரத் துறை, ஊடகம், வங்கி, மருந்துத் துறைகள் சரிவைச் சந்தித்து வருகின்றன.

எனினும் பொதுத்துறை வங்கிகள், ஆட்டோ பங்குகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

Stock Market Updates: Sensex falls over 300 pts, Nifty below 25,800

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தலைமைத் தேர்தல் ஆணையர் பதவிப் பறிப்பு தீர்மானத்துக்கு முழு ஆதரவு! - மம்தா

பட்ஜெட்டில் பெரும் ஏமாற்றம்! - முதல்வர் ஸ்டாலின்

சபரிமலை தங்கக் கவச முறைகேடு: அமைச்சர் பதவி விலகக் கோரி பாஜக போராட்டம்!

பாஜக தேர்தல் பொறுப்புகளில் இருந்து அண்ணாமலை விலகல்! | செய்திகள் : சில வரிகளில் | 3.2.26

மேன்கைண்ட் பார்மா லாபம் ரூ.414 கோடியாக அதிகரிப்பு!

SCROLL FOR NEXT