ஆன்லான் ஹெல்த்கேர் பங்குகள் 1% உயர்வு!
பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.121.03 கோடியை திரட்டியுள்ளது ஆன்லான் ஹெல்த்கேர் லிமிடெட்.
புதுதில்லி: பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.121.03 கோடியை திரட்டியுள்ளது ஆன்லான் ஹெல்த்கேர். அதே வேளையில் அதன் ஐபிஓ 7.13 முறை அதிக சந்தா வசூலிக்கப்பட்டதாக என்எஸ்இ-யின் தரவுகளை மேற்கோள் காட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆன்லான் ஹெல்த்கேர் பங்குகளின் வெளியீட்டு விலையான ரூ.91 உடன் ஒப்பிடும்போது, இன்று 1 சதவிகிதம் வரை உயர்ந்து பங்குச் சந்தையில் வர்த்தகமானது.
பிஎஸ்இ-யில் வெளியீட்டு விலையான ரூ.91 உடன் ஒப்பிடும் போது, இன்று அதிகபட்சமாக ரூ.92.50 ஆகவும் பிறகு குறைந்தபட்சமாக ரூ.89 சென்ற நிலையில் முடிவில் ரூ.91.66 ஆக நிலைபெற்றது.
Advertisement
Advertisement
என்எஸ்இ-யில், பங்கின் விலை ரூ.92 ஆக பட்டியலிடப்பட்டது. பிறகு நிறுவனத்தின் பங்குகள் ரூ.91.73 ஆக முடிவடைந்தன.
நிறுவனத்தின் சந்தை மதிப்பீடானது ரூ.487.19 கோடியாக உள்ளது.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ.88.06 ஆக முடிவு!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.