மும்பை: அந்நிய நிதி தொடந்து வெளியேற்றம் மற்றும் இந்தியாவிற்கு அமெரிக்க கூடுதலாக வரிகள் விதிக்கும் என்ற அச்சம் காரணமாக, இன்றைய வர்த்தக அமர்வில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 15 காசுகள் சரிந்து ரூ.88.27ஆக நிறைவடைந்ததது.
வீழ்ச்சியடைந்து வரும் கச்சா எண்ணெய் விலையும், இந்திய ரூபாயின் வீழ்ச்சியைத் தடுக்கத் தவறிவிட்டதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 88.11 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு குறைந்தபட்சமாக ரூ.88.38 ஐ தொட்ட நிலையில், முடிவில் 15 காசுகள் சரிந்து ரூ.88.27-ஆக முடிந்தது.
நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 10 காசுகள் சரிந்து ரூ.88.12 ஆக நிறைவடைந்தது. இதற்கு முன்பு செப்டம்பர் 2 ஆம் தேதி டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 88.15 ஆக இருந்தது. இதுவே இதுவரை இல்லாத அளவுக்குக் குறைந்த அளவாகும்.
இதையும் படிக்க: நிலையற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி! மாற்றமின்றி நிறைவடைந்த பங்குச் சந்தை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.