பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 509 புள்ளிகள் உயர்வு!
சென்செக்ஸ் 509.73 புள்ளிகள் உயர்ந்து 74,616.58 புள்ளிகளாகவும், நிஃப்டி 155.40 புள்ளிகள் உயர்ந்து 23,123.65 புள்ளிகளாக நிலைபெற்றது.
மும்பை: கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு மற்றும் உலகளாவிய சந்தைகளில் நிலவி வரும் ஏற்றம் உள்ளிட்டவையால், பங்குச் சந்தையின் முக்கியக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும், இன்றைய வர்த்தக முடிவில் உயர்வுடன் நிறைவடைந்தன.
பங்குச் சந்தை ஏற்றத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்த தகவல் தொழில்நுட்பத் துறையின் வலுவான செயல்பாடுகள் பங்குச் சந்தைக்கு பாதுகாப்புக் அரணாக அமைந்த நிலையில், தொடக்க சரிவிலிருந்து மீள இது பெரிதும் உதவியது. அதே வேலையில், நிஃப்டி குறியீடும் வர்த்தகத் தொடக்கத்தில் சந்தித்த சரிவிலிருந்து வெகுவாக மீண்டன.
30 பங்குகளை கொண்ட சென்செக்ஸ் குறியீடு 509.73 புள்ளிகள் உயர்ந்து 74,616.58 புள்ளிகளாக இருந்தது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 74,686.32 புள்ளிகளையும், குறைந்தபட்சமாக 73,282.41 புள்ளிகளையும் தொட்டது. அதே வேளையில் 50 பங்குகளை கொண்ட நிஃப்டி குறியீடு 155.40 புள்ளிகள் உயர்ந்து, 23,123.65 புள்ளிகளாக நிலைபெற்றது.
Advertisement
சென்செக்ஸில் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், எச்.சி.எல் டெக், இன்ஃபோசிஸ், பார்தி ஏர்டெல், சன் பார்மா மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறபுறம் இன்டர்குளோப் ஏவியேஷன், அதானி போர்ட்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் டைட்டன் ஆகிய பங்குகள் சரிந்தன.
ஆசிய சந்தையை பொறுத்தவரை, தென் கொரியாவின் முக்கியக் குறியீடான கோஸ்பி, ஜப்பானின் நிக்கெய் 225 மற்றும் ஷாங்காயின் ஹேங் செங் குறியீடு ஆகியவை உயர்ந்தன. ஹாங்காங் பங்குச் சந்தை விடுமுறை காரணமாக மூடப்பட்டிருந்தது.
ஐரோப்பியச் சந்தைகள் உயர்ந்து வர்த்தகமான நிலையில், அமெரிக்கப் பங்குச் சந்தைகள் நேற்று (திங்கள்கிழமை) வர்த்தக முடிவில் உயர்வுடன் நிறைவடைந்தன.
தரவுகளின் அடிப்படையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ. 8,167.17 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ள நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 8,088.70 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.71 சதவீதம் சரிந்து, பேரல் ஒன்றுக்கு 109 அமெரிக்க டாலராக உள்ளது.